728x90 AdSpace

  • Latest News

    மாணவர்களின் நலன்கருதி சேவைக்கு திரும்புமாறு ஜனாதிபதி ரயில் ஊழியர்களுக்கு அழைப்பு



    சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகள் மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு, ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

    உயர்கல்வியை தொடர்வதற்கு எதிர்பார்த்து, பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களின் உளரீதியான பாதிப்புகள் மிகுந்த கவனத்துடன் நோக்கப்படவேண்டும் என்பதால் தமது மனிதாபிமான பணியை பொறுப்புடன் நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருப்பின் அவை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மாணவர்களின் நலன்கருதி சேவைக்கு திரும்புமாறு ஜனாதிபதி ரயில் ஊழியர்களுக்கு அழைப்பு Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top