728x90 AdSpace

  • Latest News

    அலவாங்கால் குத்தி மனைவியைக் கொன்ற கணவன்: மதுபோதையில் வெறியாட்டம்

     


    வத்தளைப் பொலிஸ் பிரிவில் நேற்று (26.05.2023) இளம் குடும்பப் பெண் ஒருவர் அலவாங்கால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரின் கணவனே இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

    இச்சம்பவத்தில் மரணமடைந்த 28 வயதுடைய பெண், அரச வைத்தியசாலை ஒன்றில் தாதியாகப் பணிபுரிந்தவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலதிக விசாரணை

    குறித்த பெண் மூன்று வயதுடைய ஆண் குழந்தையின் தாய் ஆவார்.

    கொலையாளியான கணவனைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next
    This is the most recent post.
    Older Post
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: அலவாங்கால் குத்தி மனைவியைக் கொன்ற கணவன்: மதுபோதையில் வெறியாட்டம் Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top