728x90 AdSpace

  • Latest News

    கொழும்பில் கொடூரமாக தாக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி! பொலிஸார் தீவிர விசாரணை.

     


    முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் ஜா எல - சுதுவெல்ல பகுதியில் இன்று(20.05.2023) இடம்பெற்றுள்ளது. 

    பொலிஸார் தீவிர விசாரணை

    நீர்கொழும்பு - பமுனுகம வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் ஏறிய மூவர், சாரதியிடம் தொலைபேசியையும் பணத்தையும் கோரி தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    தாக்குதலுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: கொழும்பில் கொடூரமாக தாக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி! பொலிஸார் தீவிர விசாரணை. Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top