சீனாவில் உள்ள லுங்குவான் என்ற மரத்தாலான அழகிய 16 மாடி கட்டிடம் தீவிபத்தால் இருந்த இடம் தெரியாமல் எரிந்து சாம்பலாகியுள்ளது.
நேற்று காலை கீழ்த்தளத்தில் பற்ற தொடங்கிய நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவி கட்டிடம் முழுவதையும் ஆக்கிரமித்தது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும் சீன தீயணைப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்றுவரை கம்பீரமாக பொன்னிறத்தில் ஜொலித்த கட்டிடம் இன்று திடீரென காணாமல் போயுள்ளதால் அப் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.