தேசிய கல்வி நிறுவகத்தின் வழிகாட்டலில் கல்வி பொது தராதர உயர் தரத்திற்கான தொடர்பாடல் மற்றும் ஊடக பயிற்சிக்கான புதிய பாடத்திட்டத்தை இரத்து செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இந்த வருடத்திலும் உயர்தரப் பரீட்சையில் தொடர்பாடல் மற்றும் ஊடகப் பயிற்சிக்கான பரீட்சை பழைய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடத்திட்டம் வகுக்கப்பட்ட போது, அதில் உள்ளடங்கியுள்ள பாடப்பரப்பு தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வௌியிட்டிருந்தது.
தேசிய கல்வி நிறுவகத்தின் நிபுணர் குழு இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் அடுத்த வருடத்தில் இருந்து புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது.