728x90 AdSpace

  • Latest News

    குருநாகல் மாணவனைத் தாக்கிய அதிபருக்கு 3 வருட சிறைத்தண்டனை!

    மாணவர் ஒருவரை குரூரமாக தாக்கிய குற்றத்துக்கு பொல்பிதிகம தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.
    மொரகொல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் வாசல ராஜகருணா முதியன்சலாகே ஜயவர்தன பண்டா (60) என்பவருக்கெதிராகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    இதேவேளை, சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: குருநாகல் மாணவனைத் தாக்கிய அதிபருக்கு 3 வருட சிறைத்தண்டனை! Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top