எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காககொண்டு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் பெயரில் புதிய கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக கடமையாற்றிய ஹசன் அலி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமாறு ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் தாம் கூட்டாக இணைந்து, ஆட்சியில் பங்குதாரராக இருக்கின்ற அதேவேளை அவர்களுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
அந்த பேச்சுக்கள் வெற்றியளிக்குமாக இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் இல்லையென்றால், தமது தனிக்கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கூட்டமைப்பில் இன்னும் பல அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சேர உள்ளதாகவும் அதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும் ஹசன் அலி தெரிவித்தார்.