அம்பாறையில் 23,400 ட்ரெமடோல் போதை மாத்திரைகளை கார் ஒன்றில் கொண்டு செல்ல தயாராகவிருந்த நபர் ஒருவர் நேற்று (19) பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அக்கறைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான நபரே அம்பாறை பொலிஸாரினால்
கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்,இவர் இன்றைய தினம் (20) அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
News By Ajwath Shajahan