728x90 AdSpace

  • Latest News

    மும்பையில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 14 பேர் பலி ...!


    மும்பையில் வணிக வளாகம் ஒன்றில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    மும்பையில் லோயர் பரேல் பகுதியில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் 'டிரேட் ஹவுஸ்' என்ற வணிக வளாகக் கட்டடத்தின் மேல்தளத்தில் இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது. 
    மூங்கில் விடுதி..: இந்த நிலையில், குஷ்பு பன்சாலி என்பவர் தனது பிறந்த நாளை, தனது நண்பர்களுடன் அந்தக் கட்டடத்தின் மொட்டை மாடியில் கட்டப்பட்டிருந்த 'அபோவ் ஒன்' என்ற உணவு விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு கொண்டாடினார். நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கிய நிலையில், 12.30 மணிக்கு அந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த விடுதி முற்றிலும் மூங்கில்களால் வடிவமைக்கப்பட்டிருந்ததால், விடுதி முழுதும் தீ எளிதில் பரவியது. இதனால், விழாவில் கலந்து கொண்டவர்கள் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். மளமளவென்று பரவிய தீ, 3-ஆவது தளத்தில் இயங்கி வந்த 'மோஜோ' என்ற உணவு விடுதிக்கும் பரவியது. இதனால், அவர்களால் வெளியேற முடியவில்லை.
    இந்த விபத்தில், பிறந்தநாள் கொண்டாடிய குஷ்பு பன்சாலியும், 10 பெண்களும், 3 ஆண்களும் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குஷ்பு பன்சாலியின் நண்பர்கள் ஆவர்.
    இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து. 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    பட்னவீஸ் நேரில் ஆய்வு: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், கமலா மில்ஸ் வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று, தீ விபத்து நேரிட்ட இடத்தைப் பார்வையிட்டார்.
    இந்த விபத்து தொடர்பாக, மும்பை மாநகராட்சியைச் சேர்ந்த 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மும்பையில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 14 பேர் பலி ...! Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top