அமைச்சரவை உபகுழுவுடன் ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பேச்சுவார்தையை அடுத்து ரயில் ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ரயில் ஊழியர்கள் கடந்த ஏழு நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரயில்வே ஊழியர்களின் கேரிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான நால்வர் கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது