சிரேஷ்ட ஊடகவியலாளர் MSM.நூர்தீன் ( Msm Noordeen) அவர்கள் எழுதிய " சாட்சியங்கள் " நூல் வெளியீட்டு நிகழ்வு காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 12.10.2018 வெள்ளிக்கிழமை பி.ப 3:30 மணிக்கு காத்தான்குடி ஹோட்டல் பீச்வே இல் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா தலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் அல்ஹாஜ் NM.அமீன் BA அவர்கள் பிரதம் விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் MSM.நூர்தீன் அவர்கள் எழுதிய தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பிரபல்யமான கட்டுரைகளை உள்ளடக்கி வெளியிடப்படும் " சாட்சியங்கள் " நூல் விழா காத்தான்குடி மண்ணில் முதல் தடவையாக இவ் அரிய நூல் வெளிவருவதை இட்டு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் பெருமிதம் அடைவதாக இளம் ஊடக வியலாளரும் முகாசபா ஊடக வலையம்மைப்பின் நிருவாகியுமான ஜுனைத் எம். பகத் தமிழோசைக்கு தெரிவித்தார்.
இந் நிகழ்வுகளை பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களான அப்துல் மஜீத் ஜெஸீம், எம்.ஜெ.எம்.சுக்ரி ஆகியேர் தொகுத்து வழங்க உ ள்ளதோடு பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளரும் வசந்தம் தொலைக்காட்சி உதவி செய்தி முகாமையாளருமான இர்பான் முகம்மத் அவர்கள் விமர்சன உரையினையும் நிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிட தக்கதாகும்.
(தகவல். ஜுனைத் எம். பகத் -கிழக்கு மாகாண செய்தியாளர்)