(எம்.பஹ்த் ஜுனைட்)
காத்தான்குடி மீடியா போரத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அன்மையில் காத்தான்குடி றையான் பீச் பெலஸில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மெளலவி. எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் ,நவமணி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் என்.எம் .அமீன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் சாதிக் ஷிஹான் , வசந்தம் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஊடகவியலாளர் ஏ.எம்.ஜெசீம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கான புதிய அடையாள அட்டையை வழங்கி nவைத்தனர்.