சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, பலாத்காரம் காரணமாக கருவுற்றார்.
இதனையடுத்து சிறுமி காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுமியின் வயிற்றில் உள்ள 18 வார கருவை கலைக்க அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் ஆஜரான மகப்பேறியில் துறை தலைவர் டாக்டர் வசந்தா கேட்டு கொண்டார். இதனையடுத்து கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.