காதலனொருவர் தனது காதலியின் கழுத்தை வெட்டி கொலைசெய்ததுடன் தனது கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் பன்னல ஜயகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 16 வயதுடைய காதலியொருவரே காதலனால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பாக பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.