728x90 AdSpace

  • Latest News

    பிணைமுறி அறிக்கையை ​கோப் குழுவிற்கு கையளிக்க வேண்டும்.



    ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பிணைமிறி ஆணைக்குழுவின் அறிக்கையை மேலதிக ஆய்விற்காக கோப் குழுவுக்கு கையளிக்குமாறு கோப் குழு கோரியுள்ளது.
    இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கும் கையளிக்கப்பட வேண்டும் என கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். பாரிய மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட 17 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டாலும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
    பிணைமுறி அறிக்கைக்கும் அந்த நிலை ஏற்படலாம் என சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர் இந்த முறைகேடு தொடர்பில் ஆரம்ப விசாரணை நடத்திய நிறுவனம் என்ற வகையில் இந்தஅறிக்கை குறித்து ஆராயும் முழு உரிமை கோப் குழுவுக்கு இருப்பதாகவும் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: பிணைமுறி அறிக்கையை ​கோப் குழுவிற்கு கையளிக்க வேண்டும். Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top