யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள பின்னணியில் போருக்குப் பின்னரான பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றிவரும் இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் நோக்குங்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் பிரதான அமர்வில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி ஆற்றிய தனது விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்தார்.