728x90 AdSpace

  • Latest News

    விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பணி இடைநீக்கம்.


    உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் பணியை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

    விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    இன்று ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கணிஷ்ட தடகள போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்கும் வீர, வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆலோசகர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்கத் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

    விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடு காரணமாக இலங்கையை பிரதிநிதித்துவம் வீர வீராங்கனைகள் முகங்கொடுத்துள்ள அசௌகரியத்தை கருத்திற்கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் பணியை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பணி இடைநீக்கம். Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top