மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு – கோட்டை நீதவான் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன இற்றை வரை விளக்கமறியலில்..
மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர், இன்று(05) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று(04) இரவு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று(04) காலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டியவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து வாக்குமூலங்களை பெற்று வந்தனர்.
மேலும், முறி விநியோக மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனும் சந்தேகத்திற்குரியவராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.